search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிக்கட்டு போட்டி"

    • உலக தண்ணீர் தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • பல்வேறு தீர்மானங்கள் வைக்கப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் வைக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானங்களை ஏற்க போவதில்லை என்றும், இதனை ஏற்று சம்மதம் தெரிவித்து கையெழுத்திடப் போவதில்லை என்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு சேர தெரிவித்தனர். ஏற்கனவே அலகுமலை ஊராட்சியில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டும் அதனை முழுமையாக நிறைவேற்றாத அரசு நிர்வாகத்தை கண்டித்து இந்த முடிவை எடுத்து ள்ளதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜன், அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து கிராம சபை கூட்டம் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் நேற்று ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசின் சார்பாக 22 தீர்மானங்களும், மேலும் 4 தீர்மானங்கள் என மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இரு தரப்பினர் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்றும், ஒரு தரப்பினர் நடத்தியே தீர்வோம் என்றும் கூறினார். இதனால் இரு தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏற்கனவே வந்திருந்த அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் இருதரப்பின ரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து சென்றது.
    • மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பாா்வையில் 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி வீர தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று சோகத்தூர் டி.என்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியினை வருவாய் கோட்ட ஆட்சியர் கீதா ராணி மாடுபிடி வீரர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த உறுதிமொழியின் போது பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி, தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் ஆகியோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைத்தனர்.

    இந்த போட்டியில் தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ,கிருஷ்ணகிரி, திருச்செங்கோடு, மதுரை, புதுக்கோட்டை, தேனி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றுள்ளது. மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தேனி ,சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் 450 பேர் பங்கேற்று உள்ளனர்.

    இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில் ஒரு சுற்றிற்கு 100 காளைகளும், காளைகளை அடக்குவதற்கு 25 மாடுபிடி வீரர்கள் என எட்டு சுற்றுகளாக நடைபெற உள்ளது. முதல் சுற்றில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து சென்றது. இந்த காளைகளை அடக்க காளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கி வந்தனர்

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பாா்வையில் 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் வருவாய் துறையினர், கால்நடை மருத்துவத் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    • அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட காளைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஜல்லிக்கட்டு தலைவர் பழனிசாமி தோட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    கவுரவ தலைவர் சண்முகம்,முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவாசலம், சங்கத்தின் செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :- 

    ஜனவரி 29ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விழா, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி, வரும் பிப்ரவரி19- ந்தேதி அன்று மாற்று இடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சென்று அழைப்பது, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும், விளையாட்டு ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்துவது.

    மேலும் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பது என்றும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாவில்,உள்ளூர், மாவட்ட காளைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    • மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலக்க காத்திருக்கும் காங்கேயம் காளைகள்.
    • காளைகளும் இளம் காளைகளும் பொதுவாக சாம்பல் நிறத்திலேயே இருக்கும்.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. மேலும் பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரம், அதற்கு மறுநாள் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரபலமானவை.

    அனல் பறக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.

    மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் புலிக்குளம், உம்பலாசேரி, ஆலம்பாடி காங்கேயம் ஆகிய நான்கு வகை நாட்டு மாடு இன காளைகள் பங்கேற்கும். அதில் புலிக்குளம் மற்றும் காங்கேயம் காளைகளே அதிக அளவில் இடம்பெறும்.

    நான்கு வகை காளைகளில் மிகவும் ஆக்ரோஷமான, வலிமையானது காங்கேயம் காளை. வலுவான உடல் அமைப்பு, உயரமான திமில், கம்பீரமான நடை, வலிமையான கொம்பு என பல தனித் தன்மைகளைக் கொண்டது காங்கேயம் காளை, ஜல்லிக்கட்டு போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியது.

    தனது வலிமையை முழு அளவில் காட்டி மாடு பிடி வீரர்களிடமிருந்து தப்புவதில் காங்கேயம் காளைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

    4000 முதல் 5000 கிலோ வரையிலான வண்டியை கூட இழுக்கும் திறன் கொண்ட காங்கேயம் காளைகள், கடுமையான உள்ளூர் காலநிலை மற்றும் சூழ்நிலைக்கு தகுந்ததுபோல் ஆரோக்கியமாக வளரும். கடும் வெயில் காலம் மற்றும் பஞ்ச காலத்திலும் கூட பனை ஓலை, எள்ளு சக்கை, கரும்பு தோகை, வேப்பந்தழை உள்ளிட்டவைகளை சாப்பிட்டு உயிர் வாழும்.

    பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதத்திற்கு பிறகு சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும். காளைகளும் இளம் காளைகளும் பொதுவாக சாம்பல் நிறத்திலேயே இருக்கும்.

    காங்கேயம் காளையில் மயிலை, பிள்ளை, செவலை, காரி என்ற நான்கு வகைகள் உள்ளன. பிள்ளை இன காளை உழவு பணி மற்றும் பாரம் இழுத்தலுக்கும் செவலை காளை மஞ்சுவிரட்டுக்கும் பயன்படுத்தப்படும். காரி இன காளேகளே ஜல்லிக்கட்டு போட்டிக்கு பயன்படுத்தப்படும்.

    காங்கேயம் காளைகளை திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய இடங்களில் அதிக அளவில் வளர்க்கப்படு கின்றன. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் காங்கேயம் காளைகளை, சிறிய கன்றாக இருக்கும்போதே அங்கிருந்து வாங்கி வந்து, இங்கு வளர்த்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்கிறார்கள்.

    அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் கடந்த சில நாட்களாகவே தீவிர பயிற்சி அளித்து வருகிறார்கள். காங்கேயம் காளைகளும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆக்ரோஷமாக வந்து கலக்க தயாராகி வருகிறது.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கமிட்டியினர் நடத்த அனுமதிக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
    • பிற சமுதாயத்தினருக்கு மரியாதை தரவில்லை என்றும் தெரிகிறது.

    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு கமிட்டியினருக்கு இடையே பிரச்சினை உருவாகி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோர்ட்டு வரை சென்றுள்ளது.

    இந்த நிலையில் அவனி யாபுரம் அனைத்து சமு தாய கிராம கமிட்டி நிர்வாகிகள் மதுரை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, அன்புமணி ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சினையை ஆராய்ந்து பார்த்ததில் இங்கு 4-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது என்றும், பின்னர் ஒரே ஜல்லிக்கட்டாக நடத்த அரசு உத்தரவிட்ட பின்னர் கோர்ட்டு வழிகாட்டு தலின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்றும் தெரியவந்தது.

    இந்த ஜல்லிக்கட்டில் தென்கால் விவசாய கிராம கமிட்டியினர் இருவர் பொருளாதாரம் ஈட்டும் நோக்கத்தில் ஈடுபட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை உறுப்பினராக்கிக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் பிற சமுதாயத்தினருக்கு மரி யாதை தரவில்லை என்றும் தெரிகிறது.

    அவனியாபுரம் ஜல்லிக் கட்டு நடத்த தனி நபருக்கோ, தனி ஒரு அமைப்புக்கோ அனுமதி வழங்காமல் இந்த ஜல்லிக்கட்டை அவனியாபுரம் அனைத்து சமுதாயம் உள்ளடக்கிய பொதுமக்கள் கமிட்டியி னருக்கு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டு முதன்முறையாக திருச்செங்கோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது.
    • இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 750-க்கும் மேற்பட்ட காளைகளும், வீரர்களும் கலந்துகொள்கிறார்கள்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் இந்த ஆண்டு முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 750-க்கும் மேற்பட்ட காளைகளும், வீரர்களும் கலந்துகொள்கிறார்கள்.

    ஜல்லிக்கட்டு போட்டிக்காக சுமார் 7 ஏக்கர் நிலம் தூய்மைப்படுத்தும் பணியினை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் பூமி பூஜை செய்து தொடங்கி

    வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், சுமார் 1 லட்சம் பேர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் இடத்தை பார்வையிட்டுள்ளார். அவருடைய பரிந்துரையின் பேரில் தமிழக அரசின் அனுமதி பெற்று திருச்செங்கோட்டில் முதல் முறையாக திருச்செங்கோடு மாட்டு இனத்தின் நினைவு கூறும் வகையிலும் தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையிலும் நாட்டு மாடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பி.ஆர்.டி. நிறுவ–னங்களின் மேலாண்மை இயக்குனர் பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பரந்தாமன், மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் சுரேஷ் பாபு, மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளர் சரவண முருகன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராதா சேகர், ரமேஷ், சுரேஷ்குமார், ஊர் கவுண்டர் ராஜா, நகர தி.மு.க. துணைச் செயலாளர் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல், சின்ன ஓம் காளி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெற இடையூறு செய்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த அலகுமலை பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊர் அருகாமையில் உள்ள அலகுமலைமுருகன் கோவில் பிரசித்தி பெற்ற ஸ்தலம். வருடா வருடம்தைப்பொங்கல் விழாவையொட்டி 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த வருடம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெற இடையூறு செய்து வருகின்றனர் .கடந்த 4ஆண்டுகளும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக இந்த ஜல்லிக்கட்டு விழாவை நடத்தி கொடுத்துள்ளார்கள். 

    அதுபோலவேஇந்த ஆண்டும் விழாவை சிறப்பாக நடத்திக் கொடுக்க ஊர் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

    திருப்பூர் ஏர் தழுவுதல் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாடு பிடி வீரர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் பாரம்பரிய விளையாட்டான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு விழா திருப்பூரில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்றது.

    இதனால் அழிவின் விளிம்பில் இருந்த காங்கேயம் இன காளைகள் தற்போது இனவிருத்தி செய்யப்பட்டு அதிகமாகி தற்போது 280க்கும் மேற்பட்ட காளைகள் திகழ்கிறது. எனவே இந்த ஆண்டும் அலகுமலையில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாடுபிடி வீரர்கள் உள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • மாவட்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அனுமதி அளிக்கப்பட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு வீட்டை காலை செய்துவிட்டு செல்வதாக தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. அந்த வகையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் ஜனவரி 29-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த 18-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைப்பதற்கு கால்கோள் விழா நடைபெற்றது. இந்த கால்கோள் விழாவில் தமிழக ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து வாடிவாசல் மற்றும் பார்வையாளர் கேலரிகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதன் அடிப்படையில் நீதிமன்றம் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்தது. அதில் மனுதாரரின் கோரிக்கைக்கு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு 6 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்தில் மாவட்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இங்கே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அனுமதி அளிக்கப்பட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு வீட்டை காலை செய்துவிட்டு செல்வதாக தெரிவித்தனர்.மேலும் அங்கு வந்தவர்களில் சிலர் தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால் அதற்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தனர். இதனை கேட்டுக் கொண்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மறு உத்தரவு வரும் வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வாய்மொழியாக உத்தரவிட்டதாகவும், இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×